திருக்குறள்

196.

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல்.

திருக்குறள் 196

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல்.

பொருள்:

பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.

மு.வரததாசனார் உரை:

பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.